22டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் லாரி பறிமுதல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் அருகே வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 22டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய இரண்டு லாரிகளையும் மாவட்ட வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசினால் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வழங்கப்படும் இலவச அரிசி நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
இந்த ரேஷன் அரிசி அதிகளவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறிப்பாக நகர பகுதிகளை சுற்றியுள்ள நியாய விலை கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும். அரிசியை குறைந்த விலைக்கு வாங்கியும், ஒரு சில ரேஷன் கடைகளிலிருந்துமே பெற்று வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருவது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையினர் முழுகவனம் செலுத்தி கடந்த சில நாட்களாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிபாக்கம் அருகே லாரிகள் மூலம் வெளிமாநிரங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் அங்கு 2 மினி லாரிகளிலிருந்து 1 சரக்கு லாரிக்கு அரிசி மூட்டைகள் ஏற்றப்படுவதை உறுதி செய்தார்.
இதனை கண்ட ஒட்டுநர்கள் தப்பி ஓடினர். மேலும் ஒரு மினி லாரி தப்பி சென்றது. இதனையெடுத்து நின்றுகொண்டிருந்த லாரியை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி என்பதும் வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதனையெடுத்து குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த அவர்கள் 22டன் ரேஷன் அரிசியையும், ஒரு மினி லாரி உட்பட இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த குடிமை பொருள் குற்ற புலனாய்வு போலீஸார் தப்பி ஓடிய லாரி ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 60 டன் ரேசன் அரிசியும் 6 லாரிகள் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடதக்கது.
No comments
Thank you for your comments