Breaking News

சென்னையில் இருந்து கோவை, பெங்களூரு செல்லும் 22 ரயில்கள் ரத்து...

வேலூர்:

வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னையாற்றின் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து கோவை, பெங்களூரு செல்லும் 22 ரயில்கள் டிசம்பர் 26ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

பொன்னையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் காட்பாடி வழியாக சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம்  கனமழை பெய்தது. இதனால் பொன்னை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.  

இந்நிலையில், முகுந்தராயபுரம் - திருவலம் ரயில் நிலையங்களுக்கு இடையே  பாலாற்றின் குறுக்கே 1857-ம் ஆண்டு ஆங்கிலேயளர்களால் கட்டபட்ட  மேம்பாலத்தின் பில்லர் பகுதியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதை  ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.  இதனையடுத்து அவ்வழியாக ரயில்கள் இயக்கப்படுவது  நிறுத்தப்பட்டன. 

இதையடுத்து விரிசல் ஏற்பட்ட பகுதியில் சென்னை கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளர் ராம் பிரசாத் ராவ் தலைமையிலான பொறியாளர் மற்றும் ஊழியர்கள் கொண்ட 60க்கும் மேற்பட்ட குழுவினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மணல் மூட்டைகள், சாக்குப்பைகளில் ஜல்லிகளை நிரப்பி பாலத்தின் கீழ் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மூட்டைகளை அடுக்கி மட்டப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் ரயில்கள் ஆங்கங்கே பாதி வழியில் நிறுத்தப்பட்டு காலதாமதமாக செல்வதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினார்கள்..

இதனிடையே பெங்களூரு - சென்னை சதாப்தி, சென்னை - கோவை சதாப்தி ரயில் சேவையும் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோலாபேட்டை - சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, திருவனதபுரம், கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் உள்ளிட்ட 23 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்று (டிச.25) முதல் நாளை  (டிச.26 வரை) 22 பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே  அறிவித்துள்ளது.

அதன்படி, 12007 சென்னை சென்ட்ரல் - மைசூரூ, 12008 மைசூரு - சென்னை சென்ட்ரல், 12243 சென்னை சென்ட்ரல் - கோவை, 12244 கோவை - சென்னை சென்ட்ரல், 12027 பெங்களுரூ - சென்னை சென்ட்ரல், 12028 சென்னை சென்ட்ரல் - பெங்களுரூ, 22649 சென்னை சென்ட்ரல் - ஈரோடு, 22650 ஈரோடு - சென்னை சென்ட்ரல், 22637 சென்னை சென்ட்ரல் - மங்களுரூ, 22638 மங்களுரூ - சென்னை சென்ட்ரல், 16085 அரக்கோணம் - ஜோலார்பேட்டை, 16086 ஜோலார்பேட்டை - அரக்கோணம், 12671 சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்கள் டிசம்பர் 26-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதில், 12695 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம், 12696 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் டிசம்பர் 25-ம் தேதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 12610 மைசூரூ - சென்னை சென்ட்ரல், 12608 பெங்களுரூ - சென்னை, 12680 கோவை - சென்னை ரயில்கள் காட்பாடி ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 




No comments

Thank you for your comments