Breaking News

மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

 தருமபுரி

மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம். 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், லலிகம் ஊராட்சியில் மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்  24.12.21 அன்று  நடைபெற்றது. 

இந்த முகாமில்  தூய்மை இந்தியா இயக்கம், கோவிட் நோய்த்தடுப்பு, தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம், மனித உரிமைகள் தினம் மற்றும் தாய் சேய் நல விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் "பொதுமக்கள் மத்திய அரசின் திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு, தங்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தற்போதைய சூழலில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 

இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, தனிநபர் இடைவெளி மற்றும் முக கவசம் அணிவதை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்."  மேலும் மத்திய அரசு திட்டங்கள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் விவரித்தார். 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கருத்துரை, தூய்மைப் பணி, கலந்துரையாடல், புகைப்பட கண்காட்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, கள விளம்பர அலுவலர் பிபின் எஸ் நாத், கள விளம்பர உதவியாளர் வீரமணி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments