Breaking News

ஏழை எளியோர் 100 பேருக்கு அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கல்...


காஞ்சிபுரம்:

திமுக இளைஞரணி செயலாளர்-சேப்பாக்கம்:திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில், ஒன்றிய இளைஞரணி  அமைப்பாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் ஏழை எளியோர் 100 பேருக்கு அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கோனேரிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட அசோக் நகர் பகுதியில் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன்,வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார்,நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், ஒன்றிய அவைத்தலைவர் கே.பி. ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் ராம்பிரசாத், கோனேரிகுப்பம் சேகர், தசரதன்,தூசி பாலிடெக்னிக் சசிகுமார், பி.எம்.நீலகண்டன், ரவி உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.






No comments

Thank you for your comments