மழைநீர் போக வழியில்லாமல் தெருக்களில் ஓடியது... விரைந்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி
வேலூர் மாவட்டம் காட்பாடி சென்னை செல்லும் சாலையில் மழைநீர் போக வழியில்லாமல் தெருக்களில் ஓடியது.
இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சிக்கு தகவல் அளித்தனர். உடனே விரைந்து வந்த சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் நேதாஜி, மோகன், மற்றும் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மழைநீரை கால்வாய்க்குள் திருப்பி விட்டனர். இதை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
No comments
Thank you for your comments