நடைபயணம் சென்ற ரானுவவீரருக்கு சேர்மன் நிதி உதவி வழங்கி வாழ்த்து....
கடலூர்:
கொரோனா காலக்கட்டத்தில் அயராது உழைத்து உதவிய அணைத்து நாட்டு பிரதமர்கள், முதலமைச்சர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ரானுவத்தினர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்து 197 நாடுகளின் தேசிய கொடியினை சுமந்துகொண்டு இராமேஸ்வரம் பாம்பன் இருந்து சென்னை -திருச்சி நெடுஞ்சாலை வழியாக அயோத்தி நோக்கி பாலமுருகன் என்னும் ரானுவவீரர் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி கூட்டுசாலையில் சேர்மன் கே.என்.டி சுகுணா சங்கர் ரானுவவீரருக்கு சால்வை அணிவித்து வரவேற்று மதிய உணவு மற்றும் நிதி உதவி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
உடன் துணைசேர்மன் கலைச்செல்வி செல்வராஜ்,ஆலம்பாடி கவுன்சிலர் சங்கர் மற்றும் கட்சியினர் உட்பட பலர் இருந்தனர்.
No comments
Thank you for your comments