வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நரிக்குறவர், இருளர் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பொன்.சிவக்குமார் தலைமையில் தேவாத்தூர், திருநல்லூர், ஜமீன் எண்டத்தூர், தென்நாடு, ஓடம்பாக்கம், வீரணா குன்னம் ஆகிய கிராமங்களில் தொடர் மழையால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நரிக்குறவர், இருளர் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, அரிசி, காய்கறி போர்வை ஆகிய நிவாரணப் பொருட்கள் மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ வழங்கினார்.
உடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பிரியா சக்ரபாணி, சுஜாதா ஜெய்சங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள்: தேவாத்தூர் குமார், திருநல்லூர் தெய்வசிகாமணி, தென் நாடு வேலு, காவாத்தூர் சண்முகம், மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments