டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வேலூர், நவ.11-
வேலூர் மாநகராட்சியில் தொடர் மழை காரணத்தால் பொதுமக்களின் நலனைக் கருதி டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் பேரில், மாநகர நல அலுவலர் வழிகாட்டுதல் படி அனைத்து இடங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பணியில் கிட்டத்தட்ட 75 டெங்கு பணியாளர்கள், 15 தூய்மைப் பணியாளர்கள், 7 அனிமேட்டர்கள், மேற்கொள்ள ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் எனவும், தேவையற்ற பொருட்களை மழைநீர் தேங்காதவாறு பிளாஸ்டிக் பொருட்கள் காலியிடங்கள் மற்றும் மொட்டை மாடிகளில் இருந்தால் அகற்றும்படி விழிப்புணர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥Also Read : குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022: மேஷ ராசி நட்சத்திரப் பொதுப்பலன்கள்
No comments
Thank you for your comments