Breaking News

தொரப்பாடி பகுதியில் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது... அதிகாரிகள் நேரில் ஆய்வு...

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வேலூர் அடுத்த தொரப்பாடி பகுதியில் உள்ள ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.


இந்நிலையில், அப்பகுதியில்  பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் சுபா,  வட்டாட்சியர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்று மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு பணியை மேற்கொண்டனர்.


அப்பொழுது அங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றுவது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

மேலும் வேலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பாகாயம் காவல்துறை சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

No comments

Thank you for your comments