வைகுந்த பெருமாள் கோவிலில் நடைபெற்ற உலக மரபு வார விழா
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோவிலில் நடைபெற்ற உலக மரபு வார விழா -கழக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் சி.வி.எம்.பி.எழிலரசன் பங்கேற்பு.
இந்தியாவில் 40 உலக மரபுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 32 கலாச்சார சின்னங்களும் 7 இயற்கை இடங்கள் மற்றும் ஒரு கலப்பு சின்னமும் உள்ளன.
நிதி அமைச்சர் பிடிஆர் - விளக்கம்
தமிழகத்தில் மாமல்லபுரத்தில் உள்ள நினைவு சின்னங்களின் குழுமம் மற்றும் வாழும் சோழர்களின் கோயில்களான 1.பெரிய கோயில், தஞ்சாவூர், 2.பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்டசோழபுரம் 3.ஐராவதீஸ்வரர் கோயில், தாரசுரம் போன்றவை உலக மரபுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு உலக மரபு வார விழாவை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை வட்டம் மற்றும் தமிழக தொல்லியல் துறையால் நவம்பர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை காஞ்சிபுரம் வைகுந்தபெருமாள் கோயிலில் கொண்டாடப்படுகிறது.
இந்த உலக மரபு வார விழாவில் கழக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உலக மரபு வார விழா குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.
பின்னர், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து உலக மரபு வார விழா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காஞ்சி எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் உலக மரபு வார விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த உலக மரபு வார விழாவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார். பின்னர் உலக மரபு வார விழா குறித்து எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட்.கே.ஆறுமுகம், அவைத்தலைவர் சந்துரு, தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து, தொல்லியல் அலுவலர் சி.ஆர். காயத்ரி, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments