Breaking News

விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு நாள் - பேரணி ஆர்பாட்டம்...

காஞ்சிபுரம்:

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு அனைத்து கட்சி தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர்கள், விவசாயிகள், பேரணி, ஆர்பாட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.


மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த வேளாண்மை சட்டங்களை எதிர்த்து   பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டு காலமாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

🔥நாம் தேடுவதனைத்தும் நமக்கு அருகிலே இருக்கின்றன

தொடர் போராட்டத்தின் எதிரொலியாக வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்சி தொழிற்சங்கங்களின் சார்பில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கொண்ட பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி விஸ்வநாதன் தலைமையில் துவங்கிய பேரணியில்தொமுச, ஐஎன்டியூசி, சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஏஐடியுசி, எல்டியுசி, உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க அமைப்பினை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டு பேரணியாக மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டு பேரணியாகச் சென்று தேரடிப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி. எழிலரசன், முன்னாள் காங்கிரஸ் எம்பி. விஸ்வநாதன், மாவட்ட திமுக அவைத்தலைவர் சி.வி.எம்..சேகரன்,சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு,தொ.மு.ச. மாவட்ட தலைவர் இளங்கோவன்,மாவட்ட செயலாளர் சுந்தரவரதன்,தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் சாரங்கன்,மாநில துணை செயலாளர் தில்லிபாபு,சங்கையா,ஆகியோர் மத்திய அரசை கண்டித்தும், வேளாண்மைச் சட்டங்களை பாராளுமன்றத்தில் திரும்பப் பெறவேண்டும், உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிட வேண்டும், 2020 மின்சார மசோதாவை திரும்பப்பெற வேண்டும், தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் 4 தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகளும் தொழிலாளர்களும் விவசாயிகளும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments