தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை, நவ.11-
கனமழையால் சென்னை தியாகராய நகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளையும், விஜயராகவா சாலையில் உள்ள கால்வாயில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கழிவுகளை அகற்றும் பணிகளையும், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை, எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, தியாகராய நகர் பகுதிகளில் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 10.11.2021 அன்று உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் அவர்கள் கடந்த 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையிலுள்ள அனைத்து வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நான்காவது நாளாக 10.11.2021 அன்று சென்னை, எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கட்டுப்பாடு அறையின் தொலைபேசி வாயிலாக நேரடியாக கேட்டறிந்து, அதனை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை, தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள கால்வாயில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கழிவுகளை அகற்றும் பணிகளையும், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், ஜி.என்.செட்டி சாலையில் சத்தியமூர்த்தி பள்ளி வளாகம், விஸ்வநாதபுரம், ரங்கராஜபுரம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் மழைநீரை அகற்றும் பணிகளை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் உட்புறத்தில் மாம்பலம் கால்வாய் அடையாற்றில் கலக்கும் இடத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளநீர் வரத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, இதுவரை 1548 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காலை மற்றும் மதியம் சுமார் 4,40,500 உணவுப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்
தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் நா.எழிலன், த.வேலு, ஜெ.கருணாநிதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் திரு.க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
No comments
Thank you for your comments