இன்று அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
காஞ்சிபுரம்:
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் ஏற்பாட்டில் இன்று பிறந்த எட்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
இதனை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
மேலும் இன்று பிறந்த 8 குழந்தைகளுக்கும் குழந்தை பெட்டகமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், நகர செயலாளர் சன் பிராண்ட். கே. ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர அவைத்தலைவர் சந்துரு, ஒன்றிய செயலாளர்கள் பி எம் குமார்,பூபாலன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்கேபி சீனிவாசன்
மற்றும் மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார்,நகர துணை செயலாளர் ஜெகன்நாதன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments