நிரம்பி வழியும் தென்னேரி ஏரி... மலர் தூவி மகிழ்ச்சியுடன் பார்வையிட்டார் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் மிகப்பெரிய ஏரியான தென்னேரி ஏரி நிரம்பி நீர் வெளியேறுவதை மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் பார்வையிட்டார். அப்போது மலர்தூவி மகிழ்ச்சி தெரிவித்தார்.
உடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு, பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் மார்கண்டேயன், வட்டாட்சியர் லோகநாதன், ஒன்றிய கழக செயலாளர் பி.சேகர், மாவட்ட பிரதிநிதிகள் ஏ.பி.பெருமாள், என்.சச்சுதாஸ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் டி.சஞ்சய்காந்தி,எஸ்.எஸ்.கே சத்யா மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments