மகிழ்ச்சியான அறிவிப்பு... நிவாரணத் தொகை குடும்பம் ஒன்றிற்கு ரூ.6000 வழங்க முதலமைச்சர் உத்தரவு
சென்னை
மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை குடும்பம் ஒன்றிற்கு ரூ.5000/.லிருந்து ரூ.6000/. ஆக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1,80,000 மீனவ குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ.6000/.வீதம் மொத்தம் ரூ.108 கோடி மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.
இது குறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கால்நடைபராமரிப்பு, பால்வளம், மீன்வளம் (ம) மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை ரூ.5000/-லிருந்து ரூ.6,000/- ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றிடும் வகையில் நடப்பு ஆண்டிலிருந்து (2021-22) மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை குடும்பம் ஒன்றிற்கு ரூ.5000/.லிருந்து ரூ.6000/. ஆக உயர்த்தி வழங்கிடமுதலமைச்சர் ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
இதன்படி தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1,80,000 மீனவ குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ.6000/.வீதம் மொத்தம் ரூ.108.00 கோடி மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள்ளுர் முதல் இராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.24 இலட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக மொத்தம் 74.40 கோடிரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும், கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 2.10 இலட்சம் மீனவர்களுக்கு அவர்கள் செலுத்திய சந்தா பங்குத் தொகை ரூ.1,500/- உடன் அரசு நிவாரணத் தொகை ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.3000/. என்ற வகையில் மொத்தம் ரூ.4,500/- வீதம் நிவாரணத் தொகையாக மீனவர்களுக்கு வழங்கப்படும். இதற்கென அரசின் பங்குத் தொகையாக ரூ.63.19 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள்ளுர் முதல் இராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களிலுள்ள 1.48 இலட்சம் கடல் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும், கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 2.09 இலட்சம் மீனவ மகளிருக்கு அவர்கள் செலுத்திய சந்தா பங்’குத் தொகை ரூ.1500/- உடன் அரசு நிவாரணத் தொகை ஒவ்வொரு மீனவ மகளிருக்கும் ரூ.3000/- வீதம் மொத்தம் ரூ.4500/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்படும். இதற்கொன அரசின் பங்குத் தொகையாக ரூ.62.80 கோடி நிதி ஒப்பளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள்ளுர் முதல் இராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.46 இலட்சம் மீனவ மகளிருக்கு நிவாரணத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும் மீன்பிடி குறைவு கால நிவாரணம் மற்றும் சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகைகள் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மீன்பிடி குறைவு காலமாக அனுசரிக்கப்படும் ஜனவரி 2022 மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களில் வழங்கப்படும்.
இவ்வாறு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கால்நடைபராமரிப்பு, பால்வளம், மீன்வளம் (ம) மீனவர் நலத்துறை அறிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments