இடி தாக்கியதால் தனியார் மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து..!
ஈரோடு :
ஈரோடு பெரியபுலியூர் பகுதியில் இடி தாக்கியதால் தனியார் மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து... தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்...
ஈரோடு மாவட்டம் பெரியபுலியூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தயிர் பாளையம் பகுதியில் தனியார் மஞ்சள் குடோன் உள்ளது. இதை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடத்தி வருவதாக தெரிகிறது. இதில் நள்ளிரவில் இடி தாக்கியதால் மஞ்சள் குடோன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்பது மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த குடோனில் தமிழ்நாடு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான 150 டன் மஞ்சள் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தீயணைப்பு வீரர்கள் இந்த சம்பவத்தில் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்த காரணத்தினால் மீதம் நல்ல நிலையில் இருந்த மஞ்சள் காப்பாற்றப்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கவுந்தப்பாடி காவலர்கள் மற்றும் பவானி வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments