ஆப்கானிஸ்தான் எல்லைகளில் பிரத்யேக தற்கொலை படை!
காபூல்:
ஆப்கானை விட்டு மக்கள் வெளியேறுவதை தடுக்க எல்லைகளில் பயங்கரமான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுக்கவும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் தற்கொலைப் படையினரை நிறுத்தவுள்ளதாக தலிபான் அறிவித்துள்ளது.
தலிபான் , ஆப்கா னிஸ்தான் எல்லைகளைச் சுற்றி, குறிப்பாக பதாஇன் மாகாணத்தில் தற்கொலை மனித வெடிகுண்டுகளின் ஒரு பிரத்யேக படைப்பிரிவு அமைக்கப்படவுள்ளது.
பதாஇன் மாகாணத்தின் துணை ஆளுநர் முல்லா நிசார் அகமது அஹ்மதி தஜிகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையான பதாக்ஷானில் ஒரு தற்கொலை குண்டுத்தாக்குதல் பிரிவை உருவாக்குவது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும், அந்த படைக்கு 'லஷ்கர்-இ-மன்சூரி' என்று பெயரிடப்பட்டு நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்படும் என அஹ்மதி கூறினார்.
இது முந்தைய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பாதுகாப்பு படைகளை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் ஒரு படைப்பிரிவு என அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் "இந்த பட்டாலியன் இல்லையென்றால் அமெரிக்காவின் தோல்வி சாத்தியமில்லை. இந்த துணிச்சலான மனிதர்கள் இடுப்பில் வெடிகுண்டுகளை அணிந்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தளங்களை வெடிக்கச் செய்வார்கள். இவர்கள் அல்லாஹ்வின் ஒப்புதலுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் எந்த பயமும் இல்லாத மக்கள்" என்று அஹ்மதி கூறினார்.
லஷ்கர்-இ-மன்சூரியுடன், பத்ரி 313 காபூல் சர்வதேச விமான நிலையத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மிகவும் வசதியான மற்றும் நவீன இராணுவக் குழுக்களில் ஒன்றாக அறியப்படும் மற்றொரு பட்டாலியன் என்று அவர் கூறினார்.
இந்த பத்ரி 313 அனைத்து தற்கொலை மனித வெடிகுண்டுகளையும் உள்ளடக்கியதாக கூறப்படுகிறது.
No comments
Thank you for your comments