Breaking News

அரசு பேருந்தின் கண்ணாடியை தும்பிக்கையால் உரசிய யானை

ஈரோடு 

ஈரோட்டில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை காட்டுயானை தும்பிக்கையால் உரசிய வீடியோ வெளியாகியுள்ளது. 

தாளவாடியிலிருந்து சத்தியமங்கலத்திற்கு சுமார் 30 பயணிகளுடன் சென்ற பேருந்து காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்றபோது, பெண் யானை ஒன்று தனது குட்டியுடன் சாலையில் நடந்து வந்தது.

யானை வருவதை பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சாலையில் நிற்க, பேருந்து அருகே யானை வந்தது. அதன்பின் பேருந்தை சேதப்படுத்தாமல் தன் குட்டியுடன் கடந்து சென்ற யானை பேருந்துக்கு பின்னால் நின்று கொண்டிருந்த லாரியில் அடுக்கடுக்காக கட்டப்பட்டிருந்த கரும்புகளில் சிலவற்றை உருவியது.

Also 👍Read 👉 பத்மநாபபுரம் அரண்மனையின் மன்னர் பாரம்பரிய உடைவாள் கைமாற்றம்.. அமைச்சர்கள் பங்கேற்பு..


No comments

Thank you for your comments