சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மேல்நிலைப் பள்ளியில் தீடீர் ஆய்வு
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், இராணி அண்ணாதுரை மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாணவிகளிடம் பள்ளியில் போதிய வசதிகள் உள்ளதா என்றும், கொரோனா ஊரடங்கு விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் அனுபவம் குறித்தும், பள்ளியில் கழிவறைகள் சுத்தமாக உள்ளதா போன்ற குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் லட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலர் நடராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எல்.அபுசாலி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராம்பிரசாத் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
Post Comment
No comments
Thank you for your comments