அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய அறிவிப்பு
ஈரோடு, அக்.3-
இந்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய தரவு தளத்தில் அனைவரும் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று மாவட்டஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின் படி ‘ அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுதளம்” (National Data Base of Unorganized Workers – e- SHRAM / NDUW) என்ற தரவு தளத்தை (Data Base ) உருவாக்கியுள்ளது.
https://eshram.gov.in/ என்ற வலைதளத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சு வேலை செய்வோர், கல் குவாரி தொழிலாளர்கள், மர ஆலைத் தொழிலாளர்கள், உள்ளூர் கூலித் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், அங்கன் வாடிபணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவ தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், சாயபட்டறை தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், பட்டுவளர்ப்பு தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள் போன்ற 156 வகையானஅமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் (Common Service Centre) பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் அருகாமையில் உள்ள ஏதேனும் ஒரு பொது சேவைமையத்தில் பதிவு செய்து பதிவு அட்டை பெற்றுக் கொள்ளலாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம்.
இத்தரவு தளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவுசெய்துகொள்ள,
1) வயதுவரம்பு 16 முதல் 59-குள் இருக்கவேண்டும்,
2) வருவமானவரி செலுத்துபவராக இருக்க கூடாது,
3) ESI, PF பணியாளர்களாக இருக்ககூடாது.
மேலும் பதிவு செய்வதற்கு எவ்விதகட்டணமும் செலுத்ததேவையில்லை.
பதிவுசெய்வதற்கு தேவையானஆவணங்கள்:
1. ஆதார் அட்டை
2. வங்கிக் கணக்குப் புத்தகம்.
3. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்.
மேலும், அமைப்புசாரா தொழிலாளர்கள் E - shram தளத்திற்கு சென்று தாங்களாகவே சுய பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள பொது சேவைமையத்தினை அணுகி (Common Service Centre) கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்த பிறகு பயனாளிகளுக்கு UAN (UniQue Account Number) என்ற 12 இலக்கஎண் கொண்ட அடையாள அட்டைவழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் பிறகாரணங்களுக்காகவோ புலம்பெயர நேர்ந்தாலும்,அரசிடமிருந்து பெறவேண்டிய சலுகைகளைப் பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். இந்த தரவுதளத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்கள் விபத்து மரணம் அடைந்தால் “PM SURAKSHA” விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2,00,000/- இழப்பீடும், விபத்து ஊனம் ஏற்பட்டால் ரூ.1,00,000/- வரை இழப்பீடும் வழங்கப்படும்.
எனவே உச்சநீதிமன்ற உத்தரவின் படி இந்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இத்தேசிய தரவுதளத்தில் அனைவரும் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்டஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அனைத்து மாவட்டத்தினரும் இதேபோன்று பயன்பெறுலாம்...
No comments
Thank you for your comments