வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் சறுக்கு மரம் ஏறுதல் உறியடி திருவிழா
காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில் புரட்டாசி மாதத்தை ஒட்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் சறுக்கு மரம் ஏறுதல் உறியடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது
காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில் யாதவர் சமுதாயத்தின் சார்பில் புரட்டாசி மாதத்தை ஒட்டி பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் பன்னிரண்டாம் வருட திருவிழா மூன்றாம் சனிக்கிழமை அன்று விமர்சயாக நடைபெற்றது.
இத்திருவிழாவில் சருக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் திருவிழாவில் ஏராளமான இளைஞர்கள் சற்சாகமாக கலந்து கொண்டு உரி அடித்தனர் சருக்கு மரம் ஏறினர்.
உற்சவர் வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கிராம மக்களுக்கு அருள் பாலித்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அதிமுக கழக அமைப்புச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் கணேசன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் படுநெல்லி தயாளன் உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments