தூய்மை கணக்கெடுப்பு பணி தொடக்கம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தில் தூய்மை கணக்கெடுப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சியில் தேசிய அளவிலான ஊரக சுகாதார கணக்கெடுப்பு 2021 இயக்கத்தினை இன்று (19.10.2021) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.
தேசிய அளவிலான சுகாதார கணக்கெடுப்பு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது தூய்மை பாரத இயக்கத்தின் அங்கமாக இவ்வாண்டு செப்டம்பர் 9 முதல் டிசம்பர் 23 வரையிலான கணக்கெடுப்பில் சுகாதாரம் என்பது உடல் நலம், மன நலம், சமூக நலம் போன்றவற்றை சார்ந்தது திறந்த வெளியில் மலம் ஜலம் கழித்தலற்ற நிலையில் உறுதிப்படுத்துதல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டங்களின் செயலாக்கம் கணக்கிடுதல், கண்காணித்தல், பொது ஜனங்களின் சுகாதார பழக்கவழக்கங்கள், தாய்மார்களின் மாதவிடாய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நேரடி களப் பார்வை, கைபேசி கருத்துப் பதிவு, மிக முக்கிய கருத்தாளர் கூட்டம், முக்கியஸ்தர்களிடம் நேர்காணல், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களிடம் நேரடி கருத்து பெற்று மதிப்பீடு செய்யப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும் இத்திட்டம் மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லப்படும், சுகாதார கணக்கெடுப்பு குறித்து கைபேசி செயலி செயல்முறை விளக்கம் இவ்விழாவில் அளிக்கப்பட்டது, விழிப்புணர்வு துண்டு பிரசுரம், தூய்மை கணக்கெடுப்பு அடையாளச் சின்னத்தையும் மாவட்டஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டார், இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே சுகாதார போட்டியை உருவாக்கி தூய்மையான முதல் மாவட்டம் ஆவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தூய்மை பாரத இயக்கம் என்பது மக்களின் ஒத்துழைப்போடு செயல்படும் பட்சத்தில் தான் 100% இலக்கை நாம் அடைய முடியும். திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளநிலையில் மக்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என ஆரம்ப நிலையிலேயே பிரிக்கப்பட்டு கொடுக்கும் பட்சத்தில் ஊழியர்கள் குப்பைகளை கையாளுவதற்கு சுலபமாக இருக்கும். தூய்மை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று எவ்வாறு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரிக்க வேண்டும் என்பதை செயல்முறையாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
கழிவு மேலாண்மை நம் வீட்டிலிருந்தே இருந்து ஆரம்பிக்க வேண்டும் எடுத்துக்காட்டாக ஜப்பான் நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் குப்பைகளை 21 வகையாக பிரிக்கப்பட்டு அதை மறுசுழற்சி செய்து அவர்களே பயன்படுத்தி வருகின்றனர். இதில் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் நன்மை ஏற்படும் என கிராம மக்கள் நிரூபித்துள்ளனர்.
அவ்வாறு நாம் 21 வகையாக பிடிக்காவிட்டாலும் தற்போது 2 வகையாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து பொதுமக்களாகிய நீங்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் வரும் சந்ததியினருக்கு நாம் மாசற்ற சுற்று சூழலை உருவாக்கித் தர வேண்டும் என உறுதியளிக்க வேண்டும்.
இப்பொழுது ஏற்படும் பேரிடர்கள் எல்லாம் மனிதர்களால் ஏற்படும் பேரிடர்களே ஆகும். அதேபோல் இப்போதே நாம் குப்பைகளை சரியான முறையில் கையாளவில்லை என்றால் வெகுவிரைவில் குப்பைகளால் பேரிடர்கள் ஏற்படக்கூடும். எனவே பொதுமக்களாகிய நீங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு தூய்மையான முதல் மாவட்டம் ஆவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
🔥Also Read 👆வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு 👍
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, செயற்பொறியாளர் அருள், உதவி திட்ட அலுவலர் தமிழ்ச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, வட்டார ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments