கணினி சிட்டாவில் திருத்தம் பணியை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தில் இன்று கணினி சிட்டாவில் திருத்தங்களை மேற்கொள்ளும் நிகழ்ச்சியினை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் இருபத்தி ஏழு பேருக்கு பட்டா நிதி உதவி குடும்ப அட்டை உட்பிரிவு பட்டா நத்தம் வீட்டுமனை பட்டா ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் வருவாய் ஆய்வாளர் தீனதாயலன். TSO மகேஸ்வரி, நில அலுவலர்கள் பழமலை. ராஜேந்திர பிரசன்னா. சுகுமார். மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊரக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments