இளைஞர் வெட்டிப் படுகொலை
திருவள்ளூர், அக்.18-
திருவள்ளூர் மாவட்டம் மேலகொண்டயார் அடுத்த கரையான்மேடு கிராமத்தை சேர்ந்த மாத்தையா என்பவரது மகன் ஜெகதீஷ் என்பவர் திருவள்ளூர் அடுத்த பூங்காநகர் பகுதியில் கோழி கறி கடை வைத்துள்ளதாகவும் அதேபோன்று பிளிப்கார்ட் நிறுவனத்தின் பகுதி நேர ஊழியராக வேலைசெய்து வருவதாகவும் நேற்று பணிக்குச் சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில் இன்று சிவன்வாயில் பகுதியில் அமைந்துள்ள குளக்கரை ஓரத்தில் மர்மநபர்களால் வெட்டப்பட்டு சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், டிஎஸ்பி சாரதி, ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் அடங்கிய காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. மோப்பநாய் விக்கி உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments