திருவள்ளுர் மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தம் அறிவிப்பு
திருவள்ளுர், அக்.18-
திருவள்ளுர் கோட்டம், திருவள்ளுர் 110/33-11கே.வி. துணை மின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படயிருப்பதால் 21.10.2021 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை திருவள்ளுர் நகரத்தில் உள்ள ஜே.என்.சாலை (இரயில் நிலையம் முதல் எல்.ஐ.சி. வரை) பூங்கா நகர், ஐ.ஆர்.என். பின்புறம், புங்கத்தூர், எஸ்.பி. அலுவலகம் பின்புறம், சேலை, ஏகாட்டூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாளநகர், ஒண்டிகுப்பம், பாப்பரம்பாக்கம், இராமஞ்சேரி, கீழ்நல்லாத்தூர், இளுப்பூர், கொப்பூர், பாண்டூர் மற்றும் பட்டரைபெரும்பத்தூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருவள்ளுர் செயற்பொறியாளர் / இ&ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments