பிரேமா ரஞ்சித்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு... பொதுமக்கள் உற்சாக வரவேற்வு...
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் 17வது வார்டு ஒன்றிய கவுன்சிலர பதவிக்கு பிரேமா ரஞ்சித்குமார் ஓட்டு சேகரித்தார்.
17வது வார்டுக்கு உட்பட்ட களியனூர், கள்ளுக்குட்டை, இருளர் குடியிருப்பு பகுதிகளுக்கு வேட்பாளர் பிரேமா ரஞ்சித்குமார் சென்று ஓட்டு சேகரித்தார். கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதேபோல், கட்டிடத் தொழிலாளர்கள் நேரில் சந்தித்து ஓட்டு கேட்டார். 4ம் தேதி கடைசி நாள் என்பதால் ஓட்டு சேகரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது.
No comments
Thank you for your comments