Breaking News

புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயர் ஆலயத்தில் வெளியில் நின்று வணங்கிச் சென்ற பக்தர்கள்

ஆம்பூர்-அக்டோபர்-02

ஆம்பூர் நகரில் அருள்மிகு சுயம்பு பெரிய ஆஞ்சநேயர் ஆலயத்தில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு அரசு உத்தரவுப்படி ஆலயம் மூடப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான வெளிமாநில வெளி ஊரிலிருந்து வந்த அனுமன் பக்தர்கள் தடையை உடைத்து வந்து தங்கள்  குலதெய்வமான அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் ஆலயத்தின் கதவுக்கு வெளியே நின்று தாங்கள் கொண்டு வந்த துளசி மாலை வடைமாலை அணிவித்து மனமுருகி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று ஆலயத்திற்குள் செல்லாமல் வெளியில் நின்று வழிபட்ட பக்தர்கள் விரைவில் உலகில் ஏற்பட்டிருக்கும் நோய்கள் அனைத்தும் நீங்கிடவேண்டும் ஆலயங்கள் திறந்திட வேண்டும் என இறைவனிடம் மனமுருகி வேண்டி சென்றனர்.


No comments

Thank you for your comments