Breaking News

நீலாங்கரையில் உள்ள அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சோழிங்கநல்லூர்

சென்னை சோழிங்கநல்லூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட நீலாங்கரையில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 25 பேரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி இனி அம்மா உணவகத்தில் 15 நாட்கள்  சுழற்சி முறையில் பணி செய்ய வேண்டுமென மண்டலம் 15 மாநகராட்சி அதிகாரிகள்.உத்தரவிட்டதால்  அம்மா உணவக பெண்  ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் இது போன்ற செயல்களை கண்டிக்குமாறு முதல்வரிடமும் புகார் அளிக்க உள்ளதாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது, நீலாங்கரை காவல்துறை தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

No comments

Thank you for your comments