Breaking News

அப்துல்கலாம் அவர்களின் 90வது பிறந்த நாள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆய்வாளர் ஆல்பின் ராஜ் பரிசுகளை வழங்கினார்

சென்னை:

கண்ணகிநகர் அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்   முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் 90 ஆவது பிறந்த நாளை(15/10/2021) முன்னிட்டு முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் மற்றும் மாலை நேர பயிற்சி வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள்  மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மேலும், பேச்சுபோட்டி, கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கண்ணகி நகர் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் பரிசுகளை வழங்கினார்.



No comments

Thank you for your comments