Breaking News

வாழ்வாதாரம் பாதித்த சுகந்திக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்

வேலூர்

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் கழிஞ்சூர் பகுதியில் வசிக்கும் திருமதி.சுகந்தி அவர்களின் இரண்டு குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள வசதி இல்லாததை ஊடகங்கள் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் தகவலுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து,  உடனடியாக அவர்களை அழைத்து அவர்களுக்கான மருத்துவ செலவுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கி,  இவர்களின் தாயார் கோர்க்கைகளின்பால் தையல் இயந்திரம் வழங்கினார். 

மேலும், இதன் தொடர்ச்சியாக இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாமினில்  திருமதி.சுகந்தி அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா சேலூர் வீரன் கோவில் மேடு பகுதியில் வழங்கி ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக புதிதாக வீடுகட்டி தர அறிவுறுத்தினார். 

மேலும்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இதுபோன்ற வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்  தெரிவித்துள்ளார்.  உடன் மாவட்ட வருவாய் அலுவலர்  இருந்தார்.

செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்


No comments

Thank you for your comments