முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் சார்ந்த குறை தீர்க்கும் முகாம்
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 18 வயது பூர்த்தி அடைந்து முதிர்வு தொகை வேண்டி விண்ணப்பித்தும் தற்போது வரை தொகை வங்கி கணக்கில் பெறப்படாத பயனாளிகளும் மற்றும் விண்ணப்பித்து வைப்புத்தொகை இரசீது பெறாத பயனளிகளுக்கும் உள்ள குறைகளை தீர்க்கும் வகையில் 20.10.2021 புதன்கிழமை மற்றும் 21.10.2021 வியாழன்கிழமையும் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், கணியம்பாடி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குறைதீர்வு முகாம் நடக்கவுள்ளது.
18 வயது பூர்த்தி அடைந்த முதிர்வு தொகை வேண்டி விண்ணப்பித்தும் தற்போது வரை தொகை வங்கி கணக்கில் பெறப்படாத பயனாளிகள் தங்களின் வைப்புத்தொகை பத்திரம், முதிர்வு தொகைக்காக விண்ணப்பித்த போது கொடுத்த வங்கி கணக்கு புத்தகம் (நகல்) , மாற்றுச் சான்றிதழ் (நகல்), 10 வது மதிப்பெண் சான்றிதழ் (நகல்) ஆகியவற்றுடன் வருமாறும் மற்றும் வைப்புத்தொகை இரசீது பெறாத பயனாளிகள் இ-சேவை மையத்தில் பதிவு செய்த ஒப்புகை சீட்டுடன் வருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments