Breaking News

மோர்தானா கால்வாயை சேதப்படுத்திய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை உத்தரவு... மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்

வேலூர்:

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் வட்டம் மேல்மாயில் கிராமத்தில் செல்லும் மோர்தானா இடதுபுற கால்வாயில் இரண்டு இடங்களில் கால்வாயை சேதப்படுத்தி தண்ணீர் வெளியேற்றிய  நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்  காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் வட்டம் மேல்மாயில் கிராமத்தில் செல்லும் மோர்தானா அணையிலிருந்து வரும் தண்ணீரானது கடைமடை வரை சென்றடைகிறது. 

இந்த மோர்தானா இடதுபுற கால்வாயின் இரண்டு இடங்களில் சில சமூக விரோதிகள் சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். இதன் காரணமாக மோர்தானா அணை தண்ணீரை கடைமடைக்கு எடுத்துச் செல்வதில் சிரமமாக உள்ளது. 

இதனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு சொத்தை சேதப்படுத்தி மோர்தானா அணையிலிருந்து தண்ணீரை எடுத்து செல்ல தடை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


No comments

Thank you for your comments