Breaking News

வழிப்பறி கொள்ளைர்களை பிடிக்க நூற்றுக்கணக்கான போலிசார் தேடுதல் வேட்டை...

காஞ்சிபுரம்

ஏரிக்குள் துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் வழிப்பறி கொள்ளைர்களை பிடிக்க நூற்றுக்கணக்கான போலிசார் தேடுதல் வேட்டை.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னளூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி(50). இவர் சுங்கவாசடியில் ஊழியரான இவர் இன்று காலை அருகே சென்று கொண்டிருந்த போது மர்ப நபர்கள் இருவர் ஐந்தரை சவரன் தாலி செயின் அறுத்துக்கொண்டு தப்பினர்.

இதனையடுத்து அப்பெண் கத்தி கூச்சலிடவே அப்பெண்மணி கூச்சலிட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த மர்மநபர்களை பிடிக்க விரட்டி சென்றுள்ளனர்.

தப்பி ஓட முயற்சித்த கொள்ளையர்கள்  கையில் வைத்திருக்கும் துப்பாக்கியை கொண்டு பொதுமக்களை சுட முயற்சித்துள்ளார். துப்பாக்கியை கண்டதும் பொது மக்கள் பயந்து சிதறி ஓடினர்.

அதன்பிறகு சுங்கச்சாவடி அருகில் உள்ள பென்னளூர் ஏரி பகுதிக்குள் வழிப்பறி கொள்ளையர்கள்  தப்பிச் சென்று பதுங்கி உள்ளனர்.

தகவலறிந்து காஞ்சிபுரம் சரக துணை தலைவர் சத்தியபிரியா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர்  சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்க சுமார் 5 மணி நேரமாக 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 5 தனிப்படையினர் கொள்ளையனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தப்பி ஓடிய கொள்ளையன் குறித்து எந்த ஒரு பின்புலமும் இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் துப்பாக்கி வைத்துள்ள அந்த கொள்ளையனை தங்களது பாதுகாப்புகாக சுட்டு பிடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Thank you for your comments