Breaking News

வாலிபால் போட்டியில் அடோனை ஸ்போட்ஸ் அகாடமி மாணவர்கள் முதலிடம்

தருமபுரி

தருமபுரி மாவட்டம் வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் அடோனை ஸ்போட்ஸ் அகாடமி மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.



தென்னிந்தியாவின் இளைஞர் விளையாட்டு சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான கையுந்து  பந்தாட்டப் போட்டியில் " அடோனை ஸ்போர்ட்ஸ் அகாடமி " சார்பாக மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். 

இப்போட்டி அக்டோபர் 14, மற்றும் அக்டோபர் 15  ஆகிய இரு தினங்கள் பண்டாரசெட்டிப்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சுமார் 36 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதியில் அடோனை ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தனர். அடுத்தபடியாக மாநில போட்டிக்கு அடோனை ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

இப்போட்டியில் வெற்றபெற்ற வீரர்களுக்கு கோப்பை, மெடல், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்கள்.  

இம்மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சியும்  ஊக்கமும் அளித்து வெற்றிக்கு வழிவகுத்தவர் எம். செந்தில் உடற்கல்வி ஆசிரியர், நல்லம்பள்ளி  என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments