முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உதவியாளர் உட்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
காஞ்சிபுரம்
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்து குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.
இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து வருகிறது.
புதுக்கோட்டை உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள்
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் விஜயபாஸ்கரின் முன்னாள் உதவியாளர் அஜய்குமார் என்பவர் இல்லத்தில் 6:45 மணியிலிருந்து எட்டு பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அஜய்குமார் தேவேரிம்பக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
மேலும் அஜய் குமார் என்பவருக்கு சொந்தமாக தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இல்லத்தில் சோதனை நடைபெற்ற பிறகு பள்ளியிலும் சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பள்ளிக்கு விடுமுறை அளிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளன.
No comments
Thank you for your comments