பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி கைது
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History Sheet Rowdies ) மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தமிழ்ச்செல்வன் ( எ ) சின்னா ( 20 ) த/பெ.பாலகிருஷ்ணன், எண்.6/86, 6 - வது தெரு, பெரியார் நகர், படப்பை என்பவர் தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவரை மணிமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையிலான குழு மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

No comments
Thank you for your comments