வல்லக்கோட்டை திமுக வேட்பாளர் வரிசையில் நின்று வாக்குப்பதிவு
காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டி இடும் வேட்பாளர் செந்தில்தேவராஜ், தனது மனைவி ஜெயந்தி மற்றும் குடும்பத்துடன் வல்லக்கோட்டம் ஊராட்சி ஒன்றி தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட்டார்.
இந்த வாக்கு சாவடியில் காலை முதலே ஓட்டுப் பதிவு விறுவிறுப்பாவும் வேகமாகவும் நடந்தது.
வாக்காளர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வல்லக்கோட்டை தி.மு.க., கிளைச் செயலாளர் ஜென்குமாரும் மேற்கண்ட வாக்கு சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.


No comments
Thank you for your comments