Breaking News

ஹர்ஷத் அமித் அவுலியா தர்காவில் அன்னதானம்

 காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஹர்ஷத் அமித் அவுலியா தர்காவில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதையடுத்து தொடர்ந்து ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


உலகம் முழுவதும் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை மிலாடி நபி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஹர்ஷத் ஹமீது அவுலியா தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சுமார் ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு குருவின் அருளைப் பெற்று சென்றனர். விழா ஏற்பாடுகளை தர்கா நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்







No comments

Thank you for your comments