Breaking News

உள்ளாட்சித் தேர்தலையொட்டி பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!

வேலூர்:

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பினை அந்தந்த மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க பள்ளி கல்வித்துறைக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. 

 முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளையும்,   2ம் கட்ட தேர்தல் அக்டோபர் 9ம் தேதியும் நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்கள் மற்றும் தற்செயல் தேர்தல் நடைபெறும் 28 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

 👍 Also Read 👉 பச்சையப்பாஸ் சில்க்ஸ், செங்கல்வராயன் சில்க்ஸ் துணிக் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை

தேபோல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பினை அந்தந்த மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  

பள்ளிகள் தேர்தல் வாக்குசாவடி மையங்களாக செயல்படவுள்ளதாலும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லவுள்ளதாலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாட்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும்,  நாளையும் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த கிளைமேட்டை என்ஜாய் என்ஜாய் என்று டிவி பார்த்து வருகின்றனர்....  

No comments

Thank you for your comments