கார்ப்பரேட் சலூன் கடைகளால் வாழ்வாதாரம் பாதிப்பு... ஆட்சியரிடம் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை மனு...
தருமபுரி
கார்ப்பரேட் சலூன் கடைகளால் பாரம்பரிய முடிதிருத்தம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர்கள் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பொதுநல சங்கம் சார்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில்,
பாரம்பரியமாக முடிதிருத்தும் தொழில் செய்து வரும் மருத்துவர் சமூக மக்கள் சுமார் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த தொழிலை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
இந்தத் தொழிலை மாற்று சமூகத்தை சேர்ந்த பண முதலாளிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்களை தொழில் செய்ய முடியாதபடிக்கு பல்வேறுவிதமான யுத்திகளோடு சலுகை கட்டணங்களை அறிவித்து எங்கள் தொழிலை முடக்குகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. வேறு வழி தெரியாமல் எங்கள் தொழிலை கைவிட கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஏற்கனவே கொரானா நோய்த்தொற்றின் காரணமாக தொழில் நலிவடைந்த நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மறைமுக தொழில்முறை தாக்குதலால் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எமது மருத்துவர் சமூக முடிதிருத்தம் தொழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாவது கருத்தில்கொண்டு மரியாதைக்குரிய தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும் என்று மாநில துணைத் தலைவர் த.மகேஸ்வரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
No comments
Thank you for your comments