ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு மின் இணைப்பு கட்டணத்தில் 90% மானியம் அறிவிப்பு
சென்னை, செப்.8-
ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு தட்கல் மின் இணைப்பு கட்டமைப்பு 100 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் புதன்கிழமை அன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது 23 அறிவிப்புகளை வெளியிட்டார்.
வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகள் விவரம்:
ஆதிதிராவிடர் துரை பள்ளிகளில் 150 பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி செலவு மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் ஆய்வகங்கள் ஆகியவை கட்டப்படும்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் முப்பத்தி ஒன்பது உண்டி உறைவிடப் பள்ளிகளில் 100 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஆய்வுக்கூடங்கள் சுற்றுச்சூழல் ஆகியவற்றை அமைக்க ரூ. 21.13 கோடி ஒதுக்கப்படும்.
குடியிருப்புகளில் ரூபா 25 கோடி மதிப்பீட்டில் 20 சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தட்கல் மின் இணைப்பு கட்டண 90 சதவீத மானியத்தை பெற 1000 விவசாயிகள் மற்றும் பழங்குடி தேர்வு செய்யப்படுவார்கள். மானியம் வழங்க அரசுக்கு ஏற்படும் செலவு 23 .28 கோடி யாக அமையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்ற நலவாரியங்களில் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு வெளியிட்டார்.
No comments
Thank you for your comments