நகராட்சியை கண்டித்து பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்:
விருத்தாசலம் மணிமுத்தாறு சுத்தம் செய்யாத நகராட்சியை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகில் மணிமுத்தாறு ஓடுகிறது இது காசியை விட சிசம் கூட என போற்றப்படுகிறது இந்த மணிமுக்தா ஆற்றில் மாசுபடர்ந்து, குப்பைகள் நிறைந்து கழிவு நீர்களை விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகம் சரியாக சுத்தம் செய்யாததை அதனை விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விருத்தாசலம் ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், ராஜ்குமார், ஜெயபால், சேட்டு, பாக்கியராஜ் மற்றும் நல்லூர் ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், இளையராஜா, சேகர் உள்ளிட்டோர் முன்னிலையில் நகர செயலாளர் விஜயகுமார் வரவேற்புரையாற்றினார்
இதில் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேலு, மாநில மாணவரணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வம், மணிகண்டன், இளைஞர் சங்க துணை செயலாளர் மோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் சத்யா பானு, வடிவேல், சீனிவாசன், மோகன்குமார், சுரேஷ், ராஜசேகர், தன்ராஜ், ஜெயபாலன் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
No comments
Thank you for your comments