குடிநீர் வராததால் காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்:
வேப்பூர் அருகே ஐவதகுடி அருந்ததியர் தெருவில் பத்து நாட்களாக குடிநீர் வராததால் காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள ஐவதகுடி அருந்ததியர் தெருவில் பத்து நாட்களாக சரிவர குடிநீர் வராததால் தவிக்கும் பொதுமக்கள் இதுகுறித்து நல்லூர் பிடிஒ,சிவகுருநாதன் அவர்களிடம் புகார் தெரிவித்தனர்.
புகார் குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இன்று காலை காலி குடங்களுடன் 20-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிதண்ணீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments
Thank you for your comments