Breaking News

ஆசிரியர் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பு.. மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் நல்ல ஆசிரியர்கள் 9 பேருக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் விருது வழங்கப்பட்டன. 

காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடைபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி அவர்கள் தலைமையேற்று உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் முன்னிலையில் ஆசிரியர் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 

இவற்றில் ஆசிரியர்கள் பணிகளின் முக்கியத்துவத்தையும் வருங்கால இளைஞர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் பொருட்டு மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற அடிப்படையில் ஆசிரியர்களின் பணிகளை மேற்கொள் காட்டி ஆசிரியர்களை கௌரவித்தார். 

பின்பு நமது மாவட்டத்தில் ஆசிரியர்கள் 9 பேருக்கு நல்ல ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல் இம்மாவட்ட கல்வியில் சிறந்து விளங்க அனைத்து ஆசிரியர்களும் துணை நிற்க வேண்டும் என்றும் அவர்களின் பணி மேலும் மேலும் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டார். 

அதன்பின்பு ஆசிரியர்கள் சந்தவேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமாரர், படூர் முஸ்லீம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜெய வெங்கடாஜலபதி,  மாத்தூர் தி. க. கி. அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை யுவராணி, ரெட்டமங்கலம் அரசு ஆதித மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கெ. முனுசாமி, மேல்கதிர்பூர் மேட்டுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை வி. கலைச்செல்வி, திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.குமார், அவளூர் அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தி. தணிகைஅரசு, மருதம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க. கலைவாணி, குமணன்சாவடி தி நேஷ்னல் ஐடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வெ.பத்மாவதி ஆகிய ஒன்பது பேருக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், முதன்மை கல்வி அலுவலர் S.A.அருள்செல்வம், காஞ்சிபுரம்  மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், ஸ்ரீபெருமந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் C.P.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பெருமக்கள் பலர்  திரளாக கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments