Breaking News

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தலைமறைவு எதிரி கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 

1 ) ஜெபநேசன் ( எ ) சார்லஸ் ( 29 ), த/பெ.அன்னப்பன், மாரியம்மன் கோயில் தெரு, சிறுவள்ளூர் மேட்டு காலனி, காஞ்சிபுரம் மாவட்டம், தற்போது காலண்டர் தெரு, காஞ்சிபுரம் 

2 ) குணசேகரன் ( 24 ) த/பெ.கோவிந்தசாமி, எண்.132, நக்கீரன் தெரு, ஓரிக்கை, காஞ்சிபுரம் 

3 ) குணசீலன் ( 23 ), த / பெ.ரமேஷ் (லேட் ), எண்.17 / A, வணிகர் தெரு, பெரிய காஞ்சிபுரம், 

4 ) அஜித்குமார் ( 23 ), த/பெ.நாகராஜ், எண். 18A, கச்சபேஸ்வரர் மாடத்தெரு, காஞ்சிபுரம் மற்றும் 

5 ) காமு ( எ ) காமராஜ் (23 ) த/பெ.கார்த்திகேயன், காமராஜர் காஞ்சிபுரம் ஆகியோர் 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரம்யா ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) 

என்பருக்கு உதவி செய்வதாகக்கூறி நம்பவைத்து, பாலுச் செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்கதிர்பூர் கிராமத்தில் உள்ள கழனிவெளிக்கு 01.09.2021 அன்று அழைத்துச்சென்று வலுக்கட்டாயமாக பீர் குடிக்க வைத்து மேற்படி எதிரிகள் 5 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (09.09.2021 ) கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டன.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட எதிரிகள் 

1 ) ஜெபனேசன், 

2 ) குணசேகரன், 

3 ) குணசீலன், மற்றும் 

4 ) அஜீத் ஆகியோர் ( 09.09.2021 l அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  

இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு எதிரியான காமு ( எ ) காமராஜை விரைவில் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல கண்காணிப்பாளர் Dr.சுதாகர் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் காவல் உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார் மற்றும் முரளி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் இன்று (10.09.2021 ) தலைமறைவாக இருந்த காமு ( எ ) காமராஜை கைது செய்து அவரிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் ( Maruti Swift TN 21 BM 4718 ) கைப்பற்றப்பட்டுள்ளது. 

சிறப்பாக பணிபுரிந்து இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து எதிரிகளையும் கைது செய்த தனிப்படையினர் அனைவரையும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.

No comments

Thank you for your comments