Breaking News

பாலாற்றில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி

காட்பாடி, செப்.26-

காட்பாடி பாலாற்றில்  குளிக்கச் சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.



வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு  பகுதியைச் சேர்ந்த பாபு. இவர் தெருக்களில் சோன் பப்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் என நான்கு பேர் உள்ளனர்.

இதில் முபாரக்(18) மற்றும் ஜாகீர்(17) இருவரும் அருகில் உள்ள  பாலாற்றில்  இன்று குளிக்க சென்றுள்ளனர் அப்பொழுது ஜாகீர் ஆற்றில் உள்ள சேற்றில் சிக்கிக் கொண்டதை கண்ட முபாரக் தம்பியை காப்பாற்ற செல்லும் பொழுது  இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் காட்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

No comments

Thank you for your comments