ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்கள் மீட்க பொதுமக்கள் கோரிக்கை...
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோரஞ்சேரி ஊராட்சியில் அதிகப்படியாக அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
இந்த பகுதியில் குளம் குட்டை ஏரி மற்றும் அனாதினம் கோயில் நிலங்கள் உள்ளிட்ட இடங்களை தனிநபர்கள் தொடர்ந்து ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றனர்.
இதனை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது ஒருபுறம் இருந்தாலும் ஏரி குளம் குட்டைகளை ஆக்கிரமிப்பு செய்வதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் பொதுமக்கள் வருத்தத்துடன் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள ஏரி குளம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதனால் இப்பகுதியில் வாலிப பிள்ளைகள் விளையாட விளையாட்டுத்திடல் இல்லை, பூங்கா இல்லை, உடற்பயிற்சிக் கூடங்கள் இல்லை, இதனால் இந்த பகுதியில் வாலிபர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகவும் அபாயமும் இருக்கிறது.
இதனை உடனடியாக இந்த பஞ்சாயத்து நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை உள்ளது.
அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா...?
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமா....?
இல்லை, வழக்கம் மக்களின் எதிர்ப்பார்ப்பு வாய்தாவில் சென்றுவிடுமா... ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
No comments
Thank you for your comments