இயற்கையை பாதுகாக்க வேண்டும்...சர்வதேச உரிமைகள் கழகம் சார்பாக மரக்கன்றுகள் வழங்கல்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் நமது நாட்டில் தற்பொழுது அதிக மரங்களை இழந்து வருகின்றோம். இதனால் புவி வெப்பம் அடைகின்றன. புவி வெப்பம் அடைவதால் பூமியின் பருவகாலநிலை, தட்பவெப்பநிலை, இயற்கைச் சீற்ற நிகழ்வுகள் ஏற்பகின்றன. இதனால் காலநிலை மாற்றம் ஏற்படுகின்றன..
காலநிலை மாற்றம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, இயற்கையை பாதுகாக்க வேண்டும். நம்மால் முடிந்த வரை மரங்களை நடவேண்டும் என்பதற்க்காக சர்வதேச உரிமைகள் கழகம் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக திருநின்றவூர் அரசு பொது மருத்துவமனைக்கு சுமார் 370 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி நிறுவனர் தலைவர் Dr. S.சுரேஷ் கண்ணன் அவர்களின் ஆணைக்கிணங்க கழகத் தலைவர் T. K.அசோக்குமார் வழக்கறிஞர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சர்வதேச ஒருங்கிணைப்பாளர் K.முரளி அவர்கள் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் M. மரிய ஜோசப் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு பொது மருத்துவர் S.கீதா அவர்களும் அரசு சித்த மருத்துவர் S. கஸ்தூரி தேவி அவர்களும் மரக்கன்றுகளை பெற்றுக் கொண்டனர் மருத்துவமனைக்கு வரக்கூடிய பயனாளிகளுக்கு இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மாவட்ட துணை தலைவர் R. ரெனால்டு ராஜேஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் D.ஸ்டிபன் பால், மாவட்ட இளைஞரணி செயலாளர் U. செந்தில் குமார், திருநின்றவூர் நகர செயலாளர் P. சதிஷ், திருநின்றவூர் நகர துணை செயலாளர் N. ரமேஷ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
No comments
Thank you for your comments