1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் - முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை:
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23-9-2021) தொடக்கி வைத்தார்.
சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்ற விழாவில், விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் முகமாக, விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான சான்றுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி திட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருக்கக் கூடியவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 52,777 பேர்.
கடந்த 2003-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே விவசாயத்துக்கு இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விண்ணப்பித்தவா்கள் தற்போது வரை காத்திருக்கின்றனா். தட்கல் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தியவா்களும் காத்திருக்கின்றனா்.
முறையே ரூ. 25,000, ரூ.50,000 கட்டணம் செலுத்தி, பல பிரிவுகளில் விண்ணப்பித்து, நுகா்வோர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனா். மிக விரைவாக அவா்களுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில், 1 லட்சம் மின் இணைப்பு வழங்கப்படும் என நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம், மின்சாரத்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தலைமையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்கும் பணிகளை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில், இன்று விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முறைப்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

No comments
Thank you for your comments