Breaking News

சுற்றுலாத்துறையின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் அறிவிப்பு

வேலூர், ஆக.11-

சுற்றுலாத்துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில்  சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் 12.08.2021 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை   அரசினர் பென்ட்லெண்ட் மருத்துவமனை  வேலூரில்  நடைபெறயுள்ளது.  


இதில் சுற்றுலா தொழில் முனைவோர்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆட்டோ, சுற்றுலா வேன், சுற்றுலா பயணிகள் பேருந்து, மற்றும்  டாக்ஸி ஓட்டுநர்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டையுடன் வருமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments